குழந்தைகள் நல்ல
மொழுமொழுவென குண்டாக இருக்க வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புகின்றனர். அப்படி
இருந்தால் தான் அவர்கள் ஆரோக்கிமாக இருக்கின்றார்கள் என தப்பாக எண்ணுகின்றனர்.
அதற்காக அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான உணவுகளை கொடுக்கின்றனர். அது தவறான
ஒரு பழக்கமாகும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் தொடர்பில் நாம் ஒவ்வொருவரும்
மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.பொதுவாக ஒரு குழந்தைப் பிறந்து 6 மாதங்கள் வரைக்கும்
கட்டாயம் தாய் பால்தான் கொடுக்க வேண்டும். காரணம் தாய் பாலினை ஈடு செய்வதற்கு
உலகில் எதுவுமே இல்லை. எனவே முடியுமான வரைக்கும் தாய் பாலை வழங்குதவதற்கு முயற்சி
செய்யுங்கள். தாய் பாலில் தான் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான
விற்றமின்களும் கனியுப்புக்களும் அளவான வீதத்தில் இருக்கின்றன. அத்துடன் தாய்
பாலில் அதிகமான இரும்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும்
காணப்படுகின்றன.
உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்” – அறிந்து கொள்வோம்
பொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும். நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றது. அதனால் அது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு ஆகின்றது.